animal husbandry
கால்நடைகள்:: முயல் வளர்ப்பு :: நோய் மேலாண்மை முதல் பக்கம்

முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்

வ.எண்

நோயின் பெயர்

காரணிகள்

அறிகுறிகள்

சிகிச்சை / மருந்துகள்

குறிப்புகள்

1.

முயல் நச்சுயிரி நோய்

வைரஸ் (தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது

கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு

சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது.

இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும். சில நாடுகளில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.

2.

பாஸ்சுரேல்லா நுண்ம நோய்

பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா)

மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின்

-

3.

இரத்தக் கழிச்சல் நோய்

புரோட்டோசோவா எய்மெரியா மேக்னா எய்மெரிய பர்ஃபோ ரென்ஸ் எய்மெரியா ஸ்டெய்டே

பசியின்மை, உடல் மெலிதல், வயிறு வீங்குதல்

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபமிடின் நைட்ரோ பியூரசோன்

-

4.

கோழை குடல் அழற்சி

எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை

வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும்.

சிறந்த தடுப்பு முறைகள் ஏதுமில்லை.

-

5.

மடிவீக்க நோய்

ஸ்டிரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபைலோ காக்கஸ்

சிவந்த, ஊதா நிற நாளங்கள்

எதிர் உயிர்ப்பொருள்

-

6.

காது சொறி

சோரோஃபீட்ஸ் குனிகுளி

தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழியும்

பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல்). காதை சுத்தப்படுத்திய பிறகு மருந்தளிக்க வேண்டும்.

-

7

உருளை நாடா

பூஞ்சான் (டிரைக்கோபைட்டான் மைக்ரோஸ்போரான்)

முடிகள் உடலின் சில பகுதிகளிலிருந்து உதிர்ந்து விடுவதால் அங்கங்கே சொட்டையாகக் காணப்படும்

கிரிசியோஃபல்வான்

-

8.

உடல் சொறி / சொறி நோய்

நோட்டிரஸ் கேட்டி

காது மற்றும் மூக்கிலிருக்கும் முடி விழுந்துவிடும். முன்னங்கால்களால் காது மற்றும் முகங்களை பிராண்டிக் கொள்ளும்.

பாதிக்கப்பட்ட இடங்களில் பென்சைல் பென் சோயேட் மருந்தை தடவலாம். 2.5 கிலோ எடல் எடையுள்ள முயலுக்கு 0.1 மிலி ஐவர்மெக்டின் மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம்.

-

9.

பின்னங்கால் புண் (அல்சரேட்டிவ் போடோடெர்மாடிட்டிஸ்)

முயல்கள் கூண்டுகளின் கம்பித் தரையில் நிற்கும் போது உடல் எடை தாளாமல் கால்களில் புண் ஏற்படும். இப்புண்பட்ட இடங்களில் திசுக்கள் அழிந்து விடுவதால் வலி ஏற்படும்.

கணுக்கால் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, அழற்சி போன்று உடலில் தோன்றுகிறது. எடைகுறைதல், பின்பகுதியில் வீக்கம் ஏற்படுதல், காலை சாய்த்து நடக்கும்.

ஜிங்க் அயோடின் களிம்பு மற்றும் 0.2 சதவிகிதம் அலுமினியம் கரைசல் மேலும் பரவாமல் தடுக்க, நுண்ணுயிர்க்கொல்லியைப் பயன்படுத்தலாம்.

-

(தகவல் : www.vuatkerala.org)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15